Thursday 21 April 2011

நற்கருணை



கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே!

நற்கருணை என்றால் என்ன?  என்று உங்களை கேட்டோமானால், ஒவ்வொருவரும் மனதை உருக்கும் அளவில் உங்கள் கருத்துக்களை சொல்வீர்கள்.  எப்படியெனில் ‘இயேசுவை என்னில் பெறுகிறேன்’ (அ) என்னை காத்து அன்பு செய்யும் இறைவன் என்னுடைய இதயத்திற்கு வருகிறார்! என்பீர்கள்.  நற்கருணை உங்களுக்கு என்ன செய்கிறது என்று மேலும் ஓர் கேள்வியினை வைத்தால், நீங்கள் அனைவரும், நற்கருணை எங்கள் ஆன்ம நலனையும், உடல் நலனையும் தருகிறது.  ‘அல்லது மகிழ்வை தருகிறது’ என்று நீங்கள் சொன்ன உங்கள் கருத்து தவறில்லை.  சரியானது தான், ஆனால் அதுவல்ல.  இன்றைய விழாவானது முக்கிய பங்கை வகிக்கிறது.  அதாவது இந்த வாழ்வானது இயேசுவின் இலட்சியத்தை பிரதிப்பலிக்கின்றது.  கி.பி.4ஆம் நூற்றாண்டில் வெறுமனே பகிர்தலாக இருந்த இந்த அடையாளம் கி.பி 10-ஆம் நூற்றாண்டில் பலி என்ற கருத்தினை அதிகமாக வலியுறுத்தியது.  இந்த 20-ம் நூற்றாண்டில் உணவு என்ற மையக்கருத்தானது 3-ம் உலக நாடுகளில் அர்த்தம் தருவதாக விளக்கம் கொண்டிருக்கிறது.  இந்த விழாவினை கொண்டாடும் இத்தருணத்தில் இது தருகின்ற செய்தி எது என்று சிந்திப்பது பொருத்தமாகும்.

1. நான் மக்களை ஒன்றிணைக்க வந்Nதுன், உலகில் உங்கள் பிறப்பு எந்த செய்தியைக் கொடுக்க போகின்றது.
2. புதிய விடியலே எனது உயர்ந்த இலக்காக அமைந்தது.  உங்கள் வாழ்வின் இலக்கு என்ன?
3. நான் பலியாக்கப்பட்டேன்.  என்னைப்போல் நீங்களும் பலியாக்கப்படுவீர்களா? என்ற மூன்று சிந்தனைகளை நம்மை பார்த்து இயேசு கேட்கின்றார்?

முதலாவதாக நான் மக்களை ஒன்றிணைக்க வந்தேன்.  இவர்களை
ஒன்று சேர்த்து சமத்துவம், சகோதரத்துவம் படைக்க வந்தேன் என்கிறார் நம்பிரான் இயேசு.  அராபியர்களிடம் ஒரு நல்லப் பழக்கம் இருந்தது.  ஓர் அராபியன் மற்றொருவனுக்கு உப்பு வழங்கி அவனுடன் ஒன்றாக உண்டால் அவர்கள் இருவருமே பிரிக்க முடியாத நண்பர்கள் ஆவார்கள்.  இதை முறிப்பது பெரும் பாதகமாகக் கருதப்பட்டது.  ஒன்றாக அமர்ந்து உண்பது மனிதர்களுக்குள் அன்பையும், ஒற்றுமையும் வளர்கின்ற ஒரு சிறந்த செயல்.  தி.பணி 2ஃ42யை வாசித்தோமென்றால் திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும்,  அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள் என வாசிக்க கேட்கிறோம்.  நமது சமுதாயத்திலும், பங்கிலும் பல்வேறுப்பட்ட மக்கள் இருக்கின்றனர்.  ஆனால் நாம் எப்படி இருக்கின்றோம்?  என்னோடு சரிசமமாய் அமர வேண்டுமா?  அடிவிழும.; நீ படிக்காதவன், நான் படித்தவன.; உழைப்பிற்கு தகுந்த ஊதியம் வேண்டுமா?  உதை விழும், நான் முதலாளி, நீ தொழிலாளி கலப்பு திருமணமா?  சழுத்துக்கு கத்தி வரும். நீ உயர்ந்த சாதி, நான் தாழ்த்தப்பட்ட சாதி என்ற வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அதிகமாக உள்ளன.

ஆனால் 1 கொரி 10ஃ11ல் பார்த்தோமென்றால் நாம் பலராயினும் ஒரே உடலாய் உள்ளோம்.  நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறோம்.  கலா 3ஃ28-ல் கூட “இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும் அடிமைகள் என்றும், உரிமை குடிமக்கள் என்றும் இல்லை.  ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடில்லை.  கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாக இருக்கின்றீர்கள்.  இவ்வாறு விவிலியத்தில் நம் இயேசு நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என கூறுகிறார்.  ஆனால் நம் குடும்பத்தில், நம் பங்கில் நாம் ஒன்றாக வாழ்கின்றோமா என்பதை இந்நேரத்தில் சிந்திப்போம்.

இரண்டாவதாக, புதிய விடியலுக்கு இலட்சியமாக இலக்காக இருக்கின்றேன் என இயேசு நம்மைப் பார்த்து கூறுகின்றார்.  சமுதாயமானது கறை படிந்து காணப்படுகிறது.  எங்கும் எதிலும் பிளவுகள், சாதிய வேர்கள் ஆங்காங்கே செயல்பட்டு, வீரிய இயக்கங்களை வெட்டி சாய்க்கின்றன.  ஆலப்போல படர்ந்துவர வேண்டிய சமத்துவத்திற்கு வெந்நீர் ஊற்றப்படுகிறது.  பல்வேறு ஆதிக்க சக்திகள் நம்மை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றன.  அதை நாம் பார்த்துக் கண் இருந்தும் குருடர்களாய் காதுயிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் இருந்துக்கொண்டு இருக்கிறோம்.  நாம் பலமுறைகளில் இப்பங்கில் ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணிக்கும் ஒரு கிறித்துவன் தனது அயலானுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை, ஏன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை புறக்கணித்தவன் ஆகின்றான், என்பதை நாம் மறந்து விடாமல் புதிய விடியலுக்காக நமது கடமையை ஆற்ற வேண்டுமென இயேசு நம்மிடம் கூறுகின்றார்.

மூன்றாவதாக நான் பலியாக்கப்பட்டேன் என இயேசு, கூறுகின்றார்.  1976-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் வட பகுதியில் ஒரு பயங்கர நிலடுக்கம் ஏற்பட்டது.  ஆயிரக்கணக்கான வீடுகள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தன.  மலைகள் பிளந்தன.  பாவங்கள் தகர்ந்தன.  சாலைகள் துண்டிக்கப்பட்டன.  பல மக்கள் இறந்தனர்.  அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.  அங்கே கண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  தகர்ந்த கட்டிடங்கள் அடியில் ஒரு தாய் மண்டியிட்டு குப்புற கவிழ்ந்தவாறு கிடந்தார்.  அவருக்கு அடியில் அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தை தாயை உடனே தூக்கி பார்த்ததில் உயிரில்லை என்றார்கள்.  பூமியிழந்து வீடிழந்து விழுவதைக் கண்ட அந்ததாய் எப்படியாவது வாழ போகின்ற தன் குழந்தையை காப்பாற்றி விடவே என்ற முனைப்பில் குழந்தையை கீழே கடத்தி தன் உடலால் அதைக் காத்திருக்கின்றார்.

இன்றைய நற்செய்தியிலும் கூட, வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன்.  அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர் என வாசிக்கிறோம்.  நாம் கேட்ட நிகழ்ச்சியிலே குழந்தை வாழ்வதற்காக தாய் தனது உயிரையே தியாகம் செய்து இருக்கின்றார் என்பது தெளிவாக இருக்கின்றது.  பழைய ஏற்பாட்டில் காயின், ஆபேல், காய், கனி, மிருகம் போன்றவற்றை பலியிட்டார்கள். அவ்வாறே நோவே, ஆபிரகாம், மோசே பலியினைப் பற்றியும் வாசிக்கின்றோம், இந்த பலிக்கெல்லாம் முத்தாய்ப்பாக இயேசுவின் சிலுவைப்பலி நிறைவாக இருக்கின்றது.  பலி வாழ்வில் தான் வாழ்வு மலர்வதையும் நாம் காண்கிறோம்.

மத்திய பிரதேசத்தில் 1991-ல்  தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குகா நியோகி பலியானார்.  இவர் பலியானதற்கு காரணம் என்ன?  தொழிலாளிகளை இணைத்தார்.  உரிமைகளை மீட்டெடுக்க போராட வைத்தார்.  விழிப்புணர்வு அளித்தார்.  இறுதியில் வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதைப்போல் நெஸ்டர் பாசுவும் தன்னுடைய நாட்டுக்காக தனது மனைவியையும் விட்டுவிட்டு காட்டிலே தியோ போன்று என்ற படையில் தன்னையும் இணைத்து போராடினார்.  உணவில்லாமலே தனது உயிரை நாட்டிற்காக பலியாக்கினார்.  இதைப்போல் இன்றும் கூட பலர் இச்சமுதாயம் முன்னேற தங்களையே பலியாக்கி கொண்டிருக்கின்றார்கள்.  என்பது நமக்கு தெரியும்.  ஆனால் இவர்களில் வாழ்வு மலர்கின்றது என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட கூடாது.

எனவே அன்பார்ந்தவர்களே!  நம் சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் நாம் நம்மையே பலியாக்க முன்வர வேண்டும்.  தியாகம் நிறைந்த செயல்களை இவ்வுலகுக்கு அளித்திட வேண்டும்.  மக்களாகிய நாம் அனைவரும் முதலில் ஒன்றினைய வேண்டும்.  அதற்கு முன் நம் குடும்பங்களில் முதலில் தியாக உணர்வு, குடும்ப உணர்வு வளர வேண்டும்.  அப்போதுதான் நாம் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் தம்முடைய பணி மற்றவர்களுக்கு பயன்பெறும்படியாக அமைய முடியும். 

பொது தீர்வையின்போது ஆண்டவர் நம்மிடம் நீ செபமாலை செய்தாயா?  பூசைக்கு வந்தாயா?  என்னை உண்பாயா?  நவநாள் செய்தாயா?  என்பதை கேட்பதற்கு மேலாக பசித்த உள்ளங்களுக்கு உணவு தந்தியா?  ஒதுக்கப்பட்டவனை அரவணைத்தாயா?  இப்பங்கில் ஒற்றுமையை நிலைகாட்டினாயா?  பிறருடைய துன்பத்தில் கலந்து கொண்டாயா?  என்றுதான் கேட்க போகின்றார்.  எனவே பிரியமானவர்களே!  இவ் நற்கருணை விழாவில் பிறருடைய வளர்ச்சியில் பங்கு கொண்டு, நம்மிடையே நாம் பலியாக்க முன் வருவோம்.  எல்லா 
வல்ல இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து அன்பிலும் நீதியிலும் வழி நடத்துவாராக.  ---- ஆமென்.

0 comments:

Post a Comment