புதுநன்மை வாங்கவிருந்த ஒரு சிறுவனிடம், நற்கருணையில் யார் இருக்கின்றார்? என்று கேட்டதற்கு, அவர் இயேசு இருக்கின்றார் என்று மிக அழகாகப் பதில் சொன்னான். மீண்டும் அவனிடம், இயேசு நற்கருணையில் எப்படி இருக்கின்றார்? என்று கேட்டதற்கு, அவன் நல்லாத்தான் இருக்கிறார் என்றான்.
திருமண ஓலை எழுதவந்த மாப்பிள்ளையிடம் ‘நற்கருணையில் யார் இருக்கின்றார்? என்று பங்கு சாமியார் கேட்டார். அவன் ‘அந்தோனியார்’ என்றான். அவனுடையஅப்பாவை கூட்டிவர சொன்னார். அப்பாவும் வந்தார். பங்கு சாமியார் அவரிடம், உங்க பிள்ளையின் இலட்சனத்தை பாருங்க! நற்கருணையில் யாருடா இருக்கார் என்று கேட்டால் ‘அந்தோணியார’; என்கிறான். அப்பா கோபத்துடன் மகனிடம் ஏண்டா முட்டால் அப்பவே சொன்னேன் நற்கருணையில் ‘சகாயமாதா இருக்காங்கன்னு’ சொல்லுடா என்று கேட்டாதானே! என்றார்.
இயேசுவின் திருவுடலையும் திரு இரத்தத்தையும் பெறபோகும் என் அன்புக்குரிய பிள்ளைகளே!
இயேசு நம் ஒவ்வொருவருக்கும் சாகாமைக்கு மருந்துக் கொடுக்கிறார். முடிவில்லா வாழ்வை பெறுவதற்கு மருந்து கொடுக்கிறார். இறைவனோடு என்றும் ஒன்றித்திருப்பதற்கான மருந்து கொடுக்கிறார். இறைவனின் செல்ல பிள்ளைகளாக வாழ மருந்து கொடுக்கின்றார்.
ஒருமுறை முனிவர் ஒருவர் சாகாமைக்கு மருந்துகண்டுபிடித்துவிட்டேன். சாக விருப்பமில்லாதவர்கள் என்னிடம் வாருங்கள் எனக் கூறினார். அன்று அந்த ஊர் மக்கள் அனைவரும் முனிவர்முன் நின்றனர். அவரும் நிதானமாக அவர்களிடம் நீங்கள் சாகாமல் இருக்க வேண்டுமெனில் பிறவாமல் இருந்திருக்க வேண்டும் என்றாராம்.
இயேசு சாகாமைக்கு மூன்றுவகை மருந்து கொடுக்கின்றார்.
1.யோவான் 11:25-26-ல் சொல்லுவார் “உயிர்த்தெழத் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கைக் கொள்பவர்கள் இருப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைக் கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் என்கிறார். எனவே முதல் மருந்தாக அசையாத, ஆணித்தரமான, உறுதியான முறையில் இளைவன்மீது நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
2.யோவா 8:51-ல் கூறுவார் “என் வார்த்தையைக் கடைபிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்” என்கிறார். எனவே இரண்டாவது மருந்தாக இறைவார்த்தையை படித்து அல்லது கேட்டு அதன்படி வாழ வேண்டும் என்கிறார்.
3.யோவா 6:48,50,54-ல் கூறுவார் வாழ்வுதரும் உணவு நானே.விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வுதரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றமே வாழ்வார். எனது கதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்கைக் கொண்டுள்ளார்” என்கிறார்.
எனவே என் அன்புக்குரியவர்களே! இறைவனின் தொடர்ந்துவாழ இறைவன் இயேசு தரும் இந்த மூன்று மருந்தும் மனிதனுடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத மருந்தாக இருக்கிறது. இந்த மூன்று மருந்துகளும் தனித்தனியாக செயலாற்றும் தன்மை கொண்டதல்ல. மாறான ஒன்றையொன்று சார்ந்து வாழ்வு தரக்கூடிய மருந்தாக இருக்கிறது.
எனவே இறைவாக்கையும் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னத்தையும் நம்ப வேண்டும். இறைவாக்கு நம்பிக்கை கொள்வதற்கான உறுதிபாட்டைக் கொடுக்கிறது. நற்கருணை விசுவாசத்திற்கும். இறைவாக்கிற்கும் மையமாக இருந்து செயல்படுகிறது.
ஆகவே பிரியமான சகோதரமே! விசுவாசத்தை இழந்து வார்த்தையை வாழ்வாக்கவோ (அ) நற்கருணை உட்கொள்ளவோ முடியாது. அப்படி செய்தாலும் அது பயணற்றது. எனவே நற்கருணை இறைவனோடு உறவு ஏற்பட செய்கிறது. நற்கருணை வழியாக இறைவன் நம் ஒவ்வொரு உள்ளத்திலும் குடிக்கொள்கிறார். இதனால் நமது இதயங்கள் இறைவன் வாழும் தூய ஆலயமாக மாறுகின்றது.
நம்முடைய இதயங்கள் இறைவன் வாழும் ஆலயமாக இருக்க வேண்டுமெனில் எப்போதும் தூய்மையானதாக இருக்க வேண்டும். எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது என்பது நமது பொறுப்பாகும். ஏதோ ஒரு மாதம் மறைக்கல்வி வகுப்பிற்கு சென்றோம். முடிந்தளவு படித்தோம். தெரிந்தோம் இன்றோடு எல்லாம் நிறைவேறிந்து என்று முடிவுக்கு வராமல், இனிமேல்தான் எக்காலமும் இறைவன் வாழ்வதற்காக உள்ளத்தை தயாரித்த நிலையிலேயே இருக்க வேண்டும்.
ஒருமுறை நெப்போலியனிடம் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த நாள் எதுவென கேட்டதற்கு, தான் இயேசுவை முதன்முதலாக எனது உள்ளத்தில் வாங்கிய அந்த நாளே, நான் மகிழ்ச்சியாக இருந்த நாள் என்றாராம். அதுபோல நமக்கு இன்று மகிழ்ச்சியான நாள். இந்த நாளுக்காக காத்திருந்தும், இறைவனை பெற்றுக் கொண்டோம் என்ற மகிழ்வோடு இருக்க, இறைவன் நம்மில் குடிகொள்ள வேண்டும். அதற்கு உள்ளம் தூயதாக இருக்க வேண்டும்.
பகைவர்கள் எதிர்த்து போராடியபோது, நெப்போலியனின் படைவீரன் ஒருவன் எதிரியிடம் சிக்கி கொண்டான். அப்போது உனது தலைவன் போர்புரியும் இரகசியத்தை சொல் என மிரட்டினர். அவன் சொல்வதாக இல்லை. இறுதியில் துப்பாக்கியால் உன் இதயத்தை பிளந்து விடுவோம் என்று மிரட்டினர். எதற்கும் அஞ்சாத அந்த போர்வீரன் நான். எந்த இரகசியத்தையும் சொல்லமாட்டேன். என் இதயத்தை பிளந்து பாருங்கள். அங்கே என்னை வழிநடத்தும் தலைவர் நெப்போலியன் இருப்பார் என்றான். ஒரு தலைவன் மீது போர்வீரன் நம்பிக்கையை இந்த நிகழ்வு தெளிவுப்படுத்துகிறது. அதுபோல இயேசுவை உள்ளத்தில் பெறப்போகும் நீங்களும், பெற்ற நாங்களும் உறுதிபாட்டோடு வாழ்ந்து இயேசுவுக்கு சான்று பகர வேண்டும்.
மரத்தைப் பற்றிக் கொண்டு வளரும் செடியைப்போல, புயல் வீசினாலும் வெள்ளம் வந்தாலும் வளைந்து கொடுத்து வளரும் நாணல்போல, பட்டுபோன மரத்தை சாயவிடாமல் தாங்கி நிற்கும் ஆலமரத்தின் விழுதுகள்போல, இயேசுவை உள்ளத்தில் பெற்று நாம் எந்த நிலையிலும் சூழலிலும் நம்பிக்கையை இழக்காமல் வாழந்து, தூய்மையான உள்ளம் கொண்டு வாழ உறுதிக்கொண்டோம். அதற்காக செபிப்போம்.
0 comments:
Post a Comment